திருவாரூர் மாவட்டம் இளவங்கார்குடியைச் சேர்ந்தவர் அறிவழகன். பிளஸ் 2 படித்து வந்த இவரது மகன் மாதேஷ்(16), 2021, பிப்ரவரியில் புத்தாடை எடுப்பதாகக் கூறி வீட்டில் ரூ.5,000 வாங்கிக் கொண்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீஸார், சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் மாதேஷை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், தனது மொபைல் எண்ணுக்கு ஆதார் தொடர்பாக வந்த ஓடிபி எண் குறித்து போலீஸாரிடம் அறிவழகன் தெரிவித்தார். அதை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்ததில், ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவதற்காக மும்பையில் மாதேஷ் விண்ணப்பித்திருந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் திருவாரூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பூபதி, தலைமைக் காவலர் ஜானி ரஞ்சித் ஆகியோர் அறிவழகனுடன் மும்பை சென்றனர். அங்கு, மாதேஷை கண்டுபிடித்தனர். அங்கு மகனைக் கண்டதும் அறிவழகன் ஆனந்த கண்ணீர் வடித்தார். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். போலீஸார் விசாரணையில், மாதேஷ் திருவாரூரில் இருந்து பெங்களூரு சென்று, பின்னர் அங்கிருந்து மும்பை சென்றுள்ளார். மும்பையில் தொழிலதிபராக உள்ள சேலத்தைச் சேர்ந்த கனகவேலிடம் வேலைக்குச் சேர்ந்த மாதேஷ், தனக்கு தாய்- தந்தை இல்லை என்று அவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, மாதேஷை தனது மகனைபோல கனகவேல் பராமரித்து வந்துள்ளார். இந்தநிலையில்தான், அங்கு ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதற்காக பதிவு செய்தபோது வந்த ஓடிபி மூலம் காவல் துறையினர் மாதேஷின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.