புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். பின்னர் அவர்களை இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி இந்த வழக்கு இலங்கையில் உள்ள ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 8 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 8 மீனவர்களும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 8 மீனவர்களும் அங்கு 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று கொழும்புவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
சென்னை வந்த 8 மீனவர்களையும், மீன்வளத்துறை சார்பாக உதவி ஆய்வாளர் கனகராஜ் வரவேற்று அங்கிருந்து வாகனம் மூலம் அழைத்து வந்து புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக வீடு திரும்பிய மீனவர்களுக்கு மீனவ சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.