புதுக்கோட்டை வழியாக சென்னை தாம்பரம் - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்



 

தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை தாம்பரம் - திருநெல்வேலி - சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, 




தாம்பரம் - திருநெல்வேலி

பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20 அன்று இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு அதிகாலை 02.45 மணிக்கு வந்து 02.47 மணிக்கு புறப்படும் மேலும்  காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் 

மறு மார்க்கத்தில்,பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06022) திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 21 அன்று மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு மாலை 06.13 மணிக்கு வந்து 06.15 மணிக்கு புறப்படும் மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி 1 ,  குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 2,  குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 2, ஒரு மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி - சென்னை எழும்பூர் பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு அக்டோபர் 19 அன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது.




புதுக்கோட்டை ரயில் நிலையம் உபயோகிப்பார்கள் & புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கவனத்திற்கு

வரும் 20/10/22 அன்று  06021 / தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் 

➽தாம்பரம்-09:00 pm(இரவு) புறப்பட்டு 
➽புதுக்கோட்டை-02:45/02:47 am 
➽திருநெல்வேலி-09:00 am காலை செல்லும் 

மறுமார்கத்தில் வரும் 21/10/22 அன்று 
06022/திருநெல்வேலி-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் 

➽திருநெல்வேலி-01:00 Pm(மதியம்) புறப்பட்டு 
➽புதுக்கோட்டை06:13/06:15 pm 
➽சென்னை எழும்பூர்-03:20 am(அதிகாலை) செல்லும் 

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 08:00 மணிக்கு தொடங்குகிறது. 

தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 20 சென்னையிலிருந்து(தாம்பரம்) புதுக்கோட்டை வருபவர்களுக்கும், அக்டோபர் 21 அன்று திருநெல்வேலியிலிருந்து புதுக்கோட்டை வருபவர்களுக்கும் இந்த ரயில் ஒரு சிறப்பு தேர்வாக இருக்கும் புதுக்கோட்டை மக்கள் பயன்படுத்திகொள்ளளவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments