புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சடையன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் புஷ்பராஜ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற புஷ்பராஜ் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது குடும்பத்தினரிடம் செல்போனில் பேசியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை புஷ்பராஜ் அவரது அறையில் இறந்து கிடப்பதாக அவரது நண்பர்கள் புஷ்பராஜின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாடு சென்ற வாலிபர் அங்கு இறந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மிக ஏழ்மையான சூழலில் உள்ள புஷ்பராஜின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் புஷ்பராஜின் உடலை சொந்த ஊர் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.