மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளபோட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளபோட்டியில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மும்முறை தாண்டுதலில் (Triple jump) மிக மூத்தோர் (Under_19) பிரிவில் இரா.சக்திவேல் மற்றும் மூத்தோர் (under17) பிரிவில் பா.தனுஷ்குமார் ஆகிய இருவரும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் நீளம் தாண்டுதலில் மூத்தோர் பிரிவில் பா.தனுஷ்குமார் மீண்டும் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளிக்கு மாவட்ட அளவில் மூன்று தங்கங்கள் பெற்று தந்த மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் பாக்கியராஜ் அவர்களுக்கும், பள்ளியின் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ஸ்டாலின், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டியில் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.