புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பிரபு. இவர் சம்பவத்தன்று 9 ஏ நத்தம் பண்ணையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். கிளையில் பணம் எடுக்க சென்றார். அப்போது எந்திரத்தில் பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ரூ.5 ஆயிரம் வெளியே எடுக்கும் நிலையில் காணப்பட்டது. ஆனால் ஏ.டி.எம். மையத்தில் யாரும் இல்லாத நிலையில் பணம் மட்டுமே வெளியே தெரியும் படி இருந்ததால் அந்த பணத்தை அவர் எடுத்தார். மேலும் அந்த ரூ.5 ஆயிரத்தை வங்கியின் கிளை மேலாளரிடம் ஏட்டு பிரபு வழங்கினார். ஏ.டி.எம். மையத்திற்குள் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணத்தை எடுக்காமல் விட்டு சென்றிருக்கலாம் என கருதினர். அந்த பணம் யாருடையது என்பது குறித்து ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் வங்கி அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர். போலீஸ் ஏட்டுவின் இந்த செயலை சக போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.