தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் - இராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் நவாஸ்கனி எம்பி கோரிக்கை






தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரியும் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையில் ராமேஸ்வரம் வரையிலான சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.




இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கோரிக்கையில் குறிப்பிட்டிருந்ததாவது.,

என்னுடைய இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் பலரும் வெளிமாநிலங்களிலும் வெளியூர்களிலும் பணிபுரிவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையிலும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரயில்களை சிறப்பு ரயிலாக இயக்குவதத்திற்கு ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னையிலிருந்து - இராமேஸ்வரம்,

கோவையிலிருந்து பழனி திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரம்,

பெங்களுருவிலிருந்து கோவை நாமக்கல் கருர் திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரம் 

கன்னியாகுமரியிலிருந்து இராமேஸ்வரம்

பாலக்காட்டிலிருந்து இராமேஸ்வரம்

சேலத்திலிருந்து ஈரோடு திருப்பூர் கோவை பழனி திண்டுக்கல் மதுரை வழியாக இராமேஸ்வரம்

ஹைதராபாத்- இராமேஸ்வரம்.
உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கமும் சிறப்பு ரயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments