கோட்டைப்பட்டினம் தர்கா அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு!



கோட்டைப்பட்டினம் தர்கா அருகே அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை போலீஸார் மீட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் தர்கா அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒரு முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிரம நிர்வாக அலுவலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலின் பேரில், நிகழ்விடத்துக்கு வந்த கோட்டைப்பட்டினம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. இவரை பற்றி தகவல் தெரிந்தால் கோட்டைப்பட்டினம் காவல் நிலையம் 9498100775 மற்றும் காவல் உதவி ஆய்வாளர் 9498105399 என்ற கைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தகவல்:பா.முகம்மது லாபிர், கோட்டைப்பட்டினம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments