மணமேல்குடி ஒன்றியத்தில் பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளைக் கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பு!!



புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வலியுறுத்தலின்படி மணமேல்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இதில் புதுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சிவராமன், கலைமணி, சக்தி குரு ஆகிய மூன்று மாணவர்களையும், பிரதாபிராமபட்டினம் நடுநிலைப் பள்ளியில் சாவியத் நிஷா என்ற மாணவியையும், அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் முகமது காசிம் என்ற மாணவனையும், மணமேல்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நைனா முகமது என்ற மாணவனையும், அப்துல் ரசூல் என்ற மாணவனையும் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களான கோட்டைப்பட்டினம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் வனிதா என்ற மாணவியும், ஜெகதாபட்டினம் பள்ளியில் சுபாஷ் என்ற மாணவனையும், மணமேல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நித்யா பாலமா என்ற மாணவிகளையும் பள்ளியில் சேர்க்கப்பட்டது.
இக் களப்பணியில் மணமேல்குடி வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேலுச்சாமி அங்கயற்கண்ணி சிறப்பாசிரியர்கள் மணிமேகலை கோவேந்தன் இயன் முறை மருத்துவர் செல்வகுமார் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உதவியினை மேற்கொண்டு மாணவர்களையும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments