நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் 35 ஊராட்சிகள் உள்ளது. இதில் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சில் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலெட்சுமி தலைமையில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் துவங்கியது. ஊராட்சி எழுத்தர் சுமதி பஞ்சாயத்தில் உள்ள தீர்மானம் சம்பந்தமான அறிக்கையை மக்கள் மத்தியில் வாசித்தார். இதில் கிராம ஊராட்சி நிர்வாக பொது நிதி செலவினம் திட்ட பணிகள் சம்பந்தமாகவும், ஊரகப் பகுதியில் மழை நீர் சேகரிப்பது சம்பந்தமாகவும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தும் முறைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் சம்பந்தமாகவும், அனைத்து ஊரக அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பிறகு மக்கள் மத்தியில் தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக கோபாலப்பட்டிணத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் சுமார் 120 வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்காமலே இணைப்பு வழங்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டு பல லட்ச ரூபாய் மோசடி குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து சாலைகளும் செப்பனிட வேண்டும் போன்றவை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சியில் உள்ள அரசு பள்ளிக்கூட தலைமையாசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கோபாலப்பட்டிணம் மற்றும் பாதரக்குடி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் புதிய குடிநீர் இணைப்புகள் மொத்தம் 178 வழங்கப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் பாதரக்குடியில் 58 இணைப்புகளும், கோபாலப்பட்டிணத்தில் 120 இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாதரக்குடியில் மட்டும் 58 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.