அறந்தாங்கி பட்டுக்கோட்டை வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை 01 ஜனவரி 2023 வரை நீட்டிப்பு






அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் திருத்துறைப்பூண்டி வழியாக  இயங்கி கொண்டிருக்கும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற ஜனவரி மாதம் வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.




எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

இந்த வாராந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமை பகல் 12.35 மணிக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி(வண்டி எண்:06035) இடையே மதியம் 12.35 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற நவம்பர் 19-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.

வேளாங்கண்ணி - எர்ணாகுளம்

மறுமார்க்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30. மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்

வேளாங்கண்ணி-எர்ணாகுளம்(06036) இடையே மாலை 6.30 மணிக்கு புறப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவைகள், கூடுதலாக வருகிற நவம்பர் 20-ந்தேதி முதல் ஜனவரி 01-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

எங்கெங்கு நின்று செல்லும்?




இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 
கோட்டையம், செங்கனாசேரி, திர்வல்லா, செங்கனூர், மவெலிகரா, காயங்குளம், கருநாகப்பள்ளி , சாஸ்தன்கோட்டா, கொல்லம், குந்தரா, கொட்டாரகர, புணலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி , பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் 


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments