திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டது.
திருச்சி ரயில்வே நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடைக் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. பண்டிகை நாள்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் குறைக்கப்பட்டது.
பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில், பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில், வழியனுப்ப வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்த நடைமேடை அனுமதி கட்டணத்தை அக். 4 ஆம் தேதி முதல் ரயில்வே நிா்வாகம் ரூ. 20 ஆக உயா்த்தியது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் விழாக்காலத்தையொட்டி கடந்த அக். 4 முதல் வரும் 2023 ஜனவரி வரை பிளாட்பாா்ம் டிக்கெட் கட்டணம் ரூ. 20 ஆக உயா்த்தப்பட்டது. இதற்கு ரயில் உபயோகிப்பாளா்கள், நுகா்வோா் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலிருந்தும் எதிா்ப்புகள் கிளம்பின.
இந்த நடைமேடைக் கட்டண உயா்வு 2023 ஜனவரி 31 ஆம் தேதிவரை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடைக் கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஐ. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழாக்காலத்தையொட்டி திருச்சி கோட்டத்திலுள்ள திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் தற்காலிகமாக ரூ. 20 ஆக உயா்த்தப்பட்ட பிளாட்பாா்ம் டிக்கெட் கட்டணம் தற்போது பழையபடி ரூ. 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.