புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி நடக்கிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 29-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின், விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments