மணமேல்குடி ஒன்றியத்தில் நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு வட்டார அளவில் கலைத் திருவிழா தொடங்கியது.



    புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு முத்துக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு.செழியன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.    வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திருமதி இந்திராணி அவர்கள் நன்றியுரை கூறினார்


இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள் தொடர்பான போட்டிகள்  இசை நடனம் பாடல் ஓவியம் கவின்கலை நுண்கலை இசைக்கருவிகள் வாசித்தல் தனி நடிப்பு குழு நிகழ்சிகள போன்ற ஏராளமான போட்டிகள்  ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும். ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும்  11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் என் மூன்று பிரிவாக நடைபெற்று வருகின்றன. திருவிழாவாக மாணவர்களின் கொண்டாட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வில்  மக்கள் பிரதிநிதிகள்  மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி மற்றும் அங்கையற்கன்னி கலைத் திருவிழா உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்




















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments