ஆவுடையார்கோவில் அருகே வயல் வேலைக்கு பெண்களை ஏற்றிச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்து விபத்து 5 பேர் படுகாயம்!




    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த  பனையவயல் பகுதியில் மாத்தூர் சுப்ரமணியபுரம் பகுதியிலிருந்து ஆவுடையார்கோவில் பகுதிக்கு வயல் வெளியில் களையெடுப்பதற்காக ஆயிங்குடி, வல்லவாரி, மாத்தூர் சுப்புரமணியபுரம், பகுதியில் இருந்து ஆவுடையார்கோவில் பகுதியில்  வயலில் களை எடுப்பு வேலைக்கு இரண்டு டாட்டா ஏசி வாகனங்கள் மூலம் பெண்களை ஏற்றி சென்றுள்ளனர்.

 ஆவுடையார்கோவில் திருப்பெருந்துறை ஊராட்சி பனையவயல் என்னும் இடத்தில் முன்னாடி சென்ற 23 பெண்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் ஆள் இறக்குவதற்காக சாலை ஓரம் நிறுத்தி உள்ளார் பின்னாடி வந்த டாட்டா ஏசி வாகனம் நிலை தடுமாறி முன் நின்ற டாடா ஏசி வாகனம் மீது மோதியதில் வாகனம் கவிழ்ந்து ஐந்து நபர்கள் படுகாயம் அடைந்தனர்

படுகாயம் அடைந்த ஐந்து  நபர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆவுடையார் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments