மணமேல்குடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் (ராவுத்தர் நெய்னா முகமது) உயிரிழந்தார். அவருடைய அண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சாலை விபத்தில் உயிரிழந்த ராவுத்தர் நெய்னா முகமதுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும்,இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
உயிரிழந்த ராவுத்தர் நெய்னா முகமது குடும்பத்தினருக்கு அரசு நிவாரணமாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று தமுமுக அரசுக்கு கோரிக்கை வைக்கிறது. படுகாயம் அடைந்த அவருடைய அண்ணன் பாதுஷா அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் .
பலமுறை கோரிக்கைகள் வைத்தும் , கிழக்கு கடற்கரைச் சாலையில் திரியும் மாடுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் விபத்துக்கள், உயிர் பலிகள் ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுக்கப்படுகிறது.
தகவல்: முகமது மசூது, கோபாலப்பட்டிணம்.
த.மு.மு.க புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.