உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் புதுக்கோட்டைக்கு வந்துள்ளது. இந்த வாகனத்தில் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யும் உபகரணங்கள் உள்ளது. சிறிய ஆய்வகம் போல உள்ள இந்த வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் வருகிற 25-ந் தேதி வரை சுற்றிவர உள்ளது. தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பால் பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும், மசாலா பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் அஜினோ மோட்டோ மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும், உப்பில் அயோடின் பரிசோதனை மேற்கொள்ளவும், எண்ணெய் வகைகளில் வேறு எண்ணெய் கலப்படம் குறித்தும், பருப்பு வகைகளில் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், டீ மற்றும் காபியில் இரும்பு துகள்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், குடிதண்ணீரில் நீர் அளவு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது குறித்து இவ்வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்வில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் மரு.சம்பத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.