புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன், வடிவேல். இவர்கள் 2 பேரும் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் வலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டு ஒன்று சிக்கியது.
இதுகுறித்து மீனவர்கள் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு, சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் ஆகியோர் அந்த ராக்கெட் குண்டை கைப்பற்றி கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் இதுகுறித்து புதுக்கோட்டை வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கெட் குண்டை கைப்பற்றி போலீஸ் நிலையத்திலிருந்து பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு ேபாய் வைத்தனர். மேலும் அதனை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மருதம் பகுதியில் அமைந்துள்ள கமாண்டோ அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் அவர்கள் வந்து ராக்கெட் குண்டை பெற்றுக்கொண்டு அதனை செயலிழக்க செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த வகையான ராக்கெட் குண்டு `இலுமினேஷன் பாம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட் குண்டு ராணுவம், கடற்படை வீரர்கள் பயன்படுத்துவதாகும். கடலில் ஏற்படும் விபத்துகளில் பொதுமக்கள் சிக்கும்போது இந்த ராக்கெட் குண்டு மீது லைட் வைத்து வெடிக்க வைப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் கடலில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் காப்பாற்ற யாரோ வருகிறார்கள் என்று இதனை பார்த்து தெரிந்து கொண்டு பதற்றமில்லாமல் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ராணுவ வீரர்கள் பயிற்சியின் போது இந்த ராக்கெட் குண்டு வெடிக்காமல் கடலில் விழுந்திருக்க கூடும். அந்த ராக்கெட் குண்டு மீனவர் வலையில் சிக்கி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.