புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கோடியக்கரை கடல்பகுதியில் மீனவர்கள் படகுகளில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடல் பகுதியில் ராட்ச திமிங்கலம் ஒன்று ஊர்ந்து செல்வதை பார்த்தனர். இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாக ஆகி வருகிறது என்பது குறிப்படத்தக்கது.
அழகன்குளம் கடற்கரை பகுதியிலிருந்து வந்த புள்ளி திமிங்கிலமா ??
ராமநாதபுரம் மாவட்டம், பாக் நீரிணையில் உள்ள அழகன்குளம் கடல் பகுதியில் கரையோரம் மீனவா்கள் புதன்கிழைமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, ராட்சத உழுவை மீன் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்குவதைக் கண்டுள்ளனர்.
இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் ஒன்றிணைந்து மீனை மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டு சுமாா் இரண்டு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றிகரமாக கடலுக்குள் அனுப்பப்பட்டது .
கரை ஒதுங்கிய மீனை குறிப்பிட்ட நேரத்தில் மீட்டு, கடலுக்குள் அனுப்பிவைத்த மீனவா்களுக்கு சமூக ஆா்வலா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
இது போன்ற மீன்கள் மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் மட்டுமே அதிக அளவில் காணப்படும். ஆனால், நான்கு நாள்களாகத் தொடா்ந்து கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட நிலையில், பாக் நீரிணை கடல் பகுதிக்கு வந்திருக்கலாம் என மீனவா்கள் தெரிவித்தனா்.
அழகன்குளத்தில் விடப்பட்ட திமிங்கிலம் தான் கோடியக்கரை வந்து இருக்கும் என்று பேசுப்பட்டு வருகிறது..
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.