திருச்சியில் இருந்து கல்வி சுற்றுலாவாக 67 மாணவ-மாணவிகள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு வாரந்தோறும் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். அதில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளி கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
67 மாணவ-மாணவிகள் இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் தற்போது அவர்களை துபாய்க்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 மாணவ, மாணவிகள் நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்று, அவர்களுக்கு வாழ்த்து கூறினார். விமானத்தில் புறப்பட்டு சென்றனர் இதைத்தொடர்ந்து அங்கிருந்து மாணவ, மாணவிகள் நேற்று காலை 8 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வந்தனர். காலை 9.30 மணியளவில் விமான நிலையத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்தார். பின்னர் அவர் தலைமையில் மாணவ, மாணவிகள் விமானத்தில் துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம், தாமதமாக காலை 10.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றது. 4 நாட்கள் கல்வி சுற்றுலாவாக துபாய்க்கு சென்றுள்ள மாணவ, மாணவிகள், சார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிலும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.