திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் வசந்தவேல் (வயது 37). இவருக்கு அமேசான் ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் வலைதள பதிவு ஒன்று வந்துள்ளது.
அதனை அவர் திறந்து பார்த்துள்ளார். அப்போது வாட்ஸ்-அப் மற்றும் டெலிகிராம் வாயிலாக தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் ரூ.1,600 முதலீடு செய்தால் ரூ.600 லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை நம்பி வசந்தவேலும் ஆன் லைன் மூலம் பணத்தை அனுப்பவே, அவருக்கு திரும்ப ரூ.2,200-ஆக கிடைத்துள்ளது. இதனால் வசந்தவேல் உற்சாகம் அடைந்தார்.
இந்தநிலையில் 2 நாட்கள் கழித்து அவரிடம் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் ரூ.82 ஆயிரம் செலுத்தும்படி கூறியுள்ளார். ஏற்கனவே முதலீடு செய்த பணத்துக்கு ரூ.600 லாபம் கிடைத்ததால், வசந்தவேல் ரூ.82 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு இந்த முறை கூடுதல் பணமும் கிடைக்கவில்லை. செலுத்திய பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அந்த மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வந்தவேல், இதுபற்றி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிந்துநதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.82 ஆயிரத்தை மோசடி செய்த அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.