உலக கருணை தினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நண்பர்கள் சார்பில் அமுதசுரபி திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கல்!



உலக கருணை தினத்தை முன்னிட்டு அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நண்பர்கள் சார்பில் அமுதசுரபி திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாநகரில் மதிய உணவு வழங்கப்பட்டது.

உலக கருணை தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நண்பர்கள் சார்பில் அமுதசுரபி திட்டத்தின் கீழ் 60-வது நிகழ்வை அன்னவாசல் தி.மு.க மாவட்ட குழு உறுப்பினர் கை.பழனிச்சாமி தலைமை ஏற்று தொடங்கிவைத்தார். 
இதில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலை பிரபு, அறங்காவலர் மதுசூதனன் மாவட்ட குருதிக் கொடை ஒருங்கிளைப்பாளர் அரிமழம் இராமர், சமூக ஆர்வலர்கள் பாலன் நகர் பாலசுப்பிரமணியன், ஆனந்த், திருவப்பூர் ஆட்டோ பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டு புதுகை நகர் முழுவதும் 100-க்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments