மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி!



மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி ஆகியோர் வழிக்காட்டுதலின் படியும்,

மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி முன்னிலை வகித்தார். 
இப் பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர் வேலுச்சாமி மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் செய்யப்பட்டனர்.

இப்பயிற்சியில் தன்னார்வர்களுக்கு முன்னறித் தேர்வு 1 முதல் 10 வரை அனைத்து வினாக்களும் கொடுத்து மதிப்பீடு செய்தல், ஒவ்வொரு மாணவர்களின் திறன்களின் நிலைக்கு ஏற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
அதேபோல் அடிப்படை திறன்களை மாணவர்கள் பெற்றுள்ளனரா என்பதை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவு திறன் அட்டவணையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தன்னார்வலர்களாக செயல்படும் இளங்கலை பட்டதாரிகள் கல்லூரியில் படிப்பவர்களாகவும், பள்ளிக்கூடங்களில் வேலை செய்பவர்களாவும், கடைகளில் வேலை செய்வதாலும் விடுமுறை நாட்களான சனி அல்லது ஞாயிற்றுகிழமைகளில் விடுபட்டவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டதால் இன்று இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments