மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி இன்று நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி ஆகியோர் வழிக்காட்டுதலின் படியும்,
மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தொடங்கி வைத்தார்.
மணமேல்குடி ஆசிரியர் பயிற்றுநர் வேல்சாமி முன்னிலை வகித்தார்.
இப் பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர் வேலுச்சாமி மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் செய்யப்பட்டனர்.
இப்பயிற்சியில் தன்னார்வர்களுக்கு முன்னறித் தேர்வு 1 முதல் 10 வரை அனைத்து வினாக்களும் கொடுத்து மதிப்பீடு செய்தல், ஒவ்வொரு மாணவர்களின் திறன்களின் நிலைக்கு ஏற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.
அதேபோல் அடிப்படை திறன்களை மாணவர்கள் பெற்றுள்ளனரா என்பதை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவு திறன் அட்டவணையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தன்னார்வலர்களாக செயல்படும் இளங்கலை பட்டதாரிகள் கல்லூரியில் படிப்பவர்களாகவும், பள்ளிக்கூடங்களில் வேலை செய்பவர்களாவும், கடைகளில் வேலை செய்வதாலும் விடுமுறை நாட்களான சனி அல்லது ஞாயிற்றுகிழமைகளில் விடுபட்டவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த அறிவுறுத்தப்பட்டதால் இன்று இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.