புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே முத்துக்குடா கிராமத்தில் கடல் பகுதிகளில் அலையாத்தி காடுகள் சூழ்ந்து உள்ளது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் படகுமூலம் கடலுக்குள் சென்று இந்த அலையாத்தி காடுகளை ரசித்து வருகின்றனர்.
அலையாத்திக் காடுகளை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் பல கோடி ரூபாயில் இப்பகுதியில் சுற்றுலாத்தலம் அமைய இருக்கிறது. இந்த சுற்றுலா தலம் இருக்கும் இடத்தை மாவட்ட கலெக்டர் மற்றும் பல்வேறு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா தலம் அமைய இருக்கும் இடத்திற்கு செல்லும் சாலையில் தனி நபர் கல்லு கால்கள் அமைத்து முள்வேலிகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆவுடையார் கோவில் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் வில்லியம் மோசஸ் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் மீமிசல் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுலா தலத்திற்கு செல்லும் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த வேலிகளையும் அகற்றினர்.
இயற்கை அழகோடு வசீகரிக்கும் முத்துக்குடா அலையாத்தி காடு புகைப்படங்கள் கீழே உள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.