நாகப்பட்டிணம் டு தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
நாகப்பட்டிணம் டு தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் தொடர் விபத்து ஏற்படுகிறது. எனவே மாடு வளர்ப்போருக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையானது மிகவும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கன்னியாகுமரி முதல் சென்னை வரை செல்லும் முக்கிய சாலையாகும்.இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் அருகில் வந்த பிறகே மாடுகள் சாலையில் இருப்பதை அறிகின்றனர்.உடனடியாக வாகனத்தை கட்டுப்படுத்த முயலும் போது கட்டுப்பாட்டை மீறி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரழப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.
ஆகவே மாடுகளை முறையாக பராமரிக்க கால்நடை வளர்ப்போருக்கு அறிவுறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் குறுக்கே வந்த மாடு மீது மோதி கார் மோதியதால் கார் பலத்த சேதமடைந்தது மாடு பலியானது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.