மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கார் மோதி பலி
புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள தீயத்தூர் பகுதியை சேர்ந்தவர் அடைக்கலம். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 32). இவர் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள தனியார் நண்டு கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
முத்தநேந்தல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பிரேத பரிசோதனை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த ஞான சக்திவேல் (41) என்பதும், திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு செல்லும்போது விபத்து நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த ஞான சக்திவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.