மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் பாலத்தில் அபாய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்! அதிகாரிகள் சீர்செய்ய வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!



மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாலத்தில் அபாய பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் சீர்செய்ய வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் நாகப்பட்டினம் டு தூத்துக்குடி வரையிலான கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. இந்த சாலையில் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. 

மேலும் இந்த சாலை வழியாக மீன்கள் லாரிகள் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஏர்வாடி, இராமேஸ்வரம், நாகூர், வேளாங்கண்ணிக்கு வருகின்றனர்.
 
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் பாலத்தின் நடுவே அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் பள்ளத்தால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் சூழல் ஏற்படும்.

இரவு நேரங்களில் வரும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்படும். 

பெரிய வாகனங்கள் செல்லும்போது அருகில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது பள்ளத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் தெளித்து விடுகிறது. சாலையின் நடுவே உள்ள இந்த அபாய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

விபத்து நடக்காமல் முன்னெச்சரிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments