தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-II MAINS முதன்மை போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர அழைப்பு! மாவட்ட ஆட்சியர் தகவல்!!



புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் GROUP-II MAINS முதன்மை போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் படித்து பயன்பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இப்பயிற்சி மையத்தின் மூலமாக பல்வேறு வகையான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி-ஐஐ (PRELIMINARY) முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொகுதி-ஐஐ (MAINS) முதன்மை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் (22.11.2022) செவ்வாய்கிழமை அன்று உரிய திட்டநிரல் மற்றும் கால அட்டவணைப்படி நேரடியாக புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்படவுள்ளது. 

இப்பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகளும், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்களும் அவ்வப்போது மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும்.

இப்பணியிடத்திற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் விவரத்தினை decgc.pki@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 04322-222287 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments