டாக்டர் அம்பேத்கர் விருது பெற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் 23.11.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம்.! மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தகவல்!!



டாக்டர் அம்பேத்கர் விருது பெற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் 23.11.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் திருவள்ளுவர் திருநாள் விழா 2022-2023ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குதல் தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுப்பட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் ஆகியோர்களில் சிறந்தோர்களுக்கு 2022-2023ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் டாக்டர் அம்பேத்கர் விருது பெற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த மக்களின் சமூக பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு வாழ்க்கை தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து 23.11.2022 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments