அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இஜ்திமா மற்றும் கண்காட்சி!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று 04.12.2022 அறந்தாங்கியில் இஜ்திமா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக அறந்தாங்கியில் இஜ்திமா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் M.N.முபாரக் அலி தலைமை வகித்தார். செயலாளர் முஹ்சின், பொருளாளர் அப்துல் ரஜாக், துணை செயலாளர்கள் சேக் அப்துல்லா, சபீர் அலி, ரபீக் ராஜா, மருத்துவ அணி முகம்மது அலி மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் M.S.சுலைமான் அவர்கள், மாநிலப் பொதுச்செயலாளர் R.அப்துல் கரீம் MISC அவர்களும் , மாநில துணை செயலாளர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புறையாற்றினார்கள். இதில் மதரஸா மாணவ-மாணவிகள் வரதட்சனை கொடுமை திருமணம், மூடநம்பிக்கைகளுக்கு எதிராக  விழிப்புணர்வு கண்காட்சி அரங்குகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

இதில் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள்  திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணை தலைவர் முகம்மது மீரான் நன்றியுறையாற்றினார். மேலும் இதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்:
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்
கடந்த 2006 -ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசால் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கென 'Pre Metric Scholarship' எனும் பெயரில் அறிவிக்கப்பட்டிருந்த கல்வி உதவித்தொகையை  பாஜக அரசு ரத்து செய்துள்ளது.

சென்ற ஆண்டு தோராயமாக 1329 கோடிகள் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவியாக வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் இவ்வுதவியை ரத்து செய்துள்ளனர், ஏற்கனவே RTE திட்டம் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இருப்பதால் ரத்து செய்கிறோம் என அரசு கூறியுள்ளது.

ஒன்றிய அரசின் இம்முயற்சியை  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க் கட்சித் தலைவர்களும் இச்சதிவேலைக்கு எதிராக குரல் எழுப்பி  உடனடியாக அரசின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

2. பொது சிவில் சட்டம்
ஆளும் ஒன்றிய அரசு சிறுபான்மை சமுதாய மக்களை ஒடுக்குவதற்காக பொது சிவில் சட்டம் கொண்டுவர முயற்சி செய்கிறது.

வழிகாட்டு நெறி முறைகளில் பூரண மது விலக்கு கொண்டு வர வழிகாட்டபட்டுள்ளது. மக்கள் உயிரை குடிக்கும் பூரண மது விலக்கு நடைமுறை படுத்த எந்த சட்டமும் இதுவரை கொண்டு வரப்படவில்லை. 

ஆனால் வழிகாட்டு நெறிமுறையில் உள்ளதாக சொல்லி இஸ்லாமிய சமுதாயத்தை குறிவைத்து  
 பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால்  ஜனநாயக வழியில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும் என்பதை இஜித்மா கூட்டம் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம்

3தலை தூக்கும் சர்வாதிகாரம் அழிவின் விளிம்பில் ஜனநாயகம்

இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம் பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது.

பசுவின் பெயரால், மதத்தின் பெயரால் முஸ்லிம்கள் கொல்லபடுகின்றனர். பலர் சிறைச்சாலைகளில் தள்ள படுகின்றனர். மாணவர்கள் மீது கூட கடுமையான வழக்குகள் பதியப்படுகின்றன. முஸ்லிம் பெண்கள் அப்ளிகேஷன் மூலமாக மானபங்கம் செய்யப்படுகின்றனர்.

ஹிஜாப் அனிய தடை, ஹலால் இறைச்சி தடை, ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது,  என்று சொல்லில் அடங்காத துயரங்களை சுமந்து கொண்டு முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். 

முத்தலாக தடை சட்டம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 பிரிவை  ஐ நீக்கியது. NIA விற்கு சிறப்பு அதிகாரங்கள்,  பொது சிவில் சட்ட முன்னெடுப்புகள் என்று முஸ்லிம்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும்  பாசிச பாஜக அரசு செய்து வருகிறது.

சர்வாதிகாரம் வளர்ந்து வருகிறது, ஜனநாயகம் படுகுழியில் தள்ளப்படுகிறது, 

மதச்சார்பற்ற இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெள்ளையரை எதிர்த்து முஸ்லிம்கள் நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தை ஆளும் ஒன்றிய அரசிற்கு இக்கூட்டம் வாயிலாக நினைவு படுத்துகிறோம்.

முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுடைய உரிமைகள் பாதுக்காக்க பட வேண்டும் என்று இஜ்திமா வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

4.பித்அத் ஒழிப்பு மாநாடு
இன்ஷா அல்லாஹ் 2023 பிப்ரவரி 5 -ம் தேதி பித்அத் ஒழிப்பு மாநாடு  நடைபெற உள்ளது. இறைத்தூதரின் போதனைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கும் அனாச்சாரங்களையும்,   மார்க்கத்தின் பெயரால் உருவாக்கபட்ட புதுமைகளையும் முழுமையாக கலைந்திட நம்முடைய பிரச்சாரக் களத்தை வீரியப்படுத்த வேண்டும்.  இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை  வீரியமாக கொண்டு செல்ல இஜ்திமா கூட்டம் வாயிலாக உறுதி ஏற்போம்.

5.தமிழகத்தில் இடஒதுக்கீடு
 தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார்.  அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர் 
சிறுபான்மையினரான முஸ்லிம்களின்  இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

6. சி.ஏ.ஏ
இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் , இந்திய  நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. 
அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது. 
இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். 
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிராக தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இக்கூட்டம் வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.

7.முஸ்லிம் சிறைவாசிகள்
ராஜீவ்காந்தி வெடிகுண்டு   வழக்கில் மரண தண்டனை பெற்றவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோன்று குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் கொன்று குவிக்கபட்ட இன அழிப்பு கலவரத்தின் போது நடைபெற்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் தான் பல்கீஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம். 

இதயத்தை நடு நடுங்கச் செய்யும் வகையில் நான்கு வயதுக் பெண் குழந்தையை பாறையில் அடித்து கொன்று, ஏழு பேர்களை படுகொலை செய்து,  பல்கீஸ் பானுவை கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை செய்த காட்டு மிராண்டிகள் 11 பேர் இன்று நன்னடத்தை என்ற பெயரில் விடுதலை செய்யபட்டுள்ளனர்.

 ஆனால்  விசாரணை கைதிகளாகவே  30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடக் கூடிய  முஸ்லிம்களை விடுதலை செய்யாமல் இருப்பது ஒரு தலைப்பட்சமான அத்தியான நடவடிக்கையாகும் எனவே உடனடியாக தமிழக அரசு அவர்களை மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இழப்பீடு கொடுத்து விடுதலை செய்யுமாறு இக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

8. லாரிகளுக்கு தார்பாய் போட வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கும் லாரிகள் மலையடி கற்கள், மண் ஏற்றி செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடாமல் செல்வதால் அந்த வாகனத்தின் பின்னே செல்லக் கூடியவர்கள் மீது கற்களின் தூசிகள் மக்களின் கண்களை பதம் பார்த்து விடுகிறது சில நேரங்களில் விபத்துக்கள் கூட ஏற்பட்டு விடுகிறது எனவே இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு  இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் .

9.குண்டும்-குழியுமான சாலை

அறந்தாங்கியில் கட்டுமாவடி முக்கத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது இந்த வழியில் செல்லும் வாகனங்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறது இதற்கு உடனடியாக புதிய சாலை அமைக்குமாறு கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: ரபீக் ராஜா








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments