இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேர் விடுதலையாவார்களா? நாளை மறுநாள் தெரியவரும்




இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 24 பேர் விடுதலையாவார்களா? என்பது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தெரியும்.

24 மீனவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதில் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் செல்வது உண்டு. இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி ஜெகதாப்பட்டினத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இதில் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த 5 விசைப்படகுகளை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுக்கோட்டை மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஜெகதாப்பட்டினத்தில் மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விடுதலையாவார்களா?

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. மேலும் மத்திய அரசு தரப்பில் இருந்தும் மீனவர்களை விடுவிக்க இலங்கை தரப்பில் வேண்டுகோள் விடுவிக்கப்பட்டுள்ளது. கைதான மீனவர்கள் அங்குள்ள சிறையில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களின் விடுதலையை எதிர்நோக்கி மீனவ குடும்பத்தினர் உள்ளனர்.

இது தொடர்பாக மீன்வளத்துறை வட்டாரத்தில் கேட்ட போது, ‘‘மீனவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) அங்குள்ள கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வருவதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? என்பது தெரியவரும். எதுவாயினும் நாளை மறுநாள் தான் தெரியும்’’ என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments