ஆவுடையார் கோவில் அருகே தனியார் பஸ் மோதி ஒருவர் பலி




ஆவுடையார்கோவில் நெல்லியடி கரையை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (வயது 50). இவர், மோட்டார் சைக்கிளில் ஆவுடையார்கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். புண்ணியவயல் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் ராஜபாண்டியன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments