புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் செந்தில் (வயது 40). நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இவரும் இவருடன், 2 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். வழக்கம்போல் மீன்பிடித்துக் கொண்டு நேற்று கரை திரும்பினர். அப்போது இவர்கள் வலையை எடுக்கும்போது வலையில் அரிய வகை ஆமை ஒன்று சிக்கி இருப்பதை கண்டனர். உடனே இது குறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் வனத்துறை சரக அலுவலர் மேகலா தலைமையிலான வனக்காவலர்கள் விரைந்து வந்து ஆமையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த ஆமை அரிய வகையான பச்சை ஆமை என்று தெரியவந்தது. இந்த வகையான ஆமை இந்தப் பகுதியில் மட்டும் தான் காணப்படுகிறது என்று கூறப்படுகிறது. பின்னர் ஆமையை மீனவர்கள் மற்றும் வனத்துறையினர் மீண்டும் கடலில் பத்திரமாக விட்டனர். ஆமை வலையில் சிக்கியது அறிந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து மீண்டும் கடலுக்குள் விட உறுதுணையாக இருந்த மீனவர்களுக்கு வனத்துறை சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.