(16-12-2022) வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு மற்றும் அறந்தாங்கி பெரியநாயகி சண்முகம் தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச தோல் நோய் மருத்துவ முகாமிலே 300க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அரிமளம் வட்டார மருத்துவ அலுவலர் நம்ம ஊரு மருத்துவர் Dr.பழனிவேல்ராஜா அவர்கள் மற்றும் பாரத நேசன் பாண்டிபத்திரம் திரு.கணேசன் அவர்கள் குத்து விளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். தோல் நோய் மற்றும் லேசர் மருத்துவர் மக்கள் மருத்துவர் அறந்தாங்கியைச் சேர்ந்த Dr.தெட்சிணாமூர்த்தி கலந்து கொண்டு இலவச சிகிச்சை அளித்தார்.
அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி கிளப் 2018-19 தலைவர் திரு.விகாஸ் சரவணன், செயலாளர் திரு.கணேசன், பொருளாளர் திரு. கண்ணன், முன்னாள் தலைவர்கள் திரு.கபார்கான், திரு.முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சார்பிலும், ஆவுடையார்கோவில் சுற்றுலா தலம் திரு.பெருமாள் நடராஜன், திரு.முருகானந்தம், திரு.மாதேஸ் ஆகியோர் திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பு-அறந்தாங்கி சார்பிலும், திரு.ஜஹாங்கீர், திரு.விஜய் ஆகியோர் பெரியநாயகி சண்முகம் மருத்துவமனை சார்பாகவும் முகாம் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
நன்றி : ஆவுடையார் கோவில் சுற்றுலாதலம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.