மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு குறைதீர் கற்பித்தல் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.




புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி வட்டார வள மையம்  , கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்பலவாணநேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு இடங்களில்  இப் பயிற்சி நடைபெற்றது.

இப்ப பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு.செழியன் அவர்கள் மணமேல்குடி வட்டார வள மையத்தில்  தொடங்கி வைத்தார்.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்புக்குரிய திரு இந்திராணி அவர்கள் மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்பயிற்சியில் தன்னார்வர்களுக்கு  ஒவ்வொரு மாணவரின் திறன்களுக்கு நிலை ஏற்ப அனைத்து அடிப்படை திறன்களையும் மேம்படுத்துவது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது.

 அதேபோல் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் அடிப்படை திறன்களை  மாணவர்கள் பெற்றுள்ளனரா என்பதை மதிப்பீட்டின் மூலம் உறுதி செய்து அடைவு திறன் அட்டவணையில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது..

பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன் வேல்சாமி மற்றும் அங்கையற்கன்னி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் தலைமை ஆசிரியர்கள் தேவராஜ்  ஆசிரியர்கள் நிஸாந்தினி முனியசாமி செபஸ்தியான்   ஆகியோர் செய்யப்பட்டனர்.


















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments