ராமநாதபுரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகம் மதுரை மண்டல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் மதுரை மண்டலத்தில் இருந்து பிரித்து ராமநாதபுரத்தை தலைமையிடமாக கொண்டு பத்திரப்பதிவு மண்டல அலுவலகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி ராமநாதபுரத்தில் பத்திர பதிவு மண்டல அலுவலகம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது.. இந்த மண்டல அலுவலகத்தின்கீழ் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை மற்றும் காரைக்குடி பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். இந்த புதிய பத்திரப்பதிவுத்துறை மண்டல அலுவலகம், மதுரையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், குத்து விளக்கு ஏற்றி அலுவலக பணிகளை தொடங்கி வைத்தார். விழாவிற்கு நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர்கள் ரத்தினவேல், ரமேஷ், ராமநாதபுரம் நாகராட்சி தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர் பிரபாகரன், பத்திரப்பதிவு கண்காணிப்பு அலுவலர்கள் சீனிவாசன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.