கோட்டைப்பட்டினத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த 16 மாடுகள் சிறைபிடிப்பு! ஊராட்சி மன்ற நிர்வாகம் நடவடிக்கை!



கோட்டைப்பட்டினம் கடைவீதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் மாடுகள், கன்றுக்குட்டிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

கால்நடைகளை வளர்ப்போர் தங்களது வீட்டின் அருகே கட்டி வைத்து பராமரிக்க ஊராட்சி மன்ற நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. இருப்பினும் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிகிறது. இந்த நிலையில் கோட்டைப்பட்டினம் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு மாடு பிடி வேட்டை நடத்தினர். 

16 மாடுகள் சிறைபிடிப்பு 
இதில் சாலைகளில் படுத்திருந்த, நடமாடிய மாடுகள் மற்றும் கன்றுகுட்டிகளை சிறைபிடித்து வாகனம் மூலம் கோட்டைப்பட்டினம் அருகே உள்ள ஒரு வளாகத்திற்கு கொண்டு வந்து அடைத்தனர்.
 
இதில் மொத்தம் 16 மாடுகள் சிறை பிடிக்கப்பட்டன. மாட்டின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி மாடுகளை அழைத்து செல்லுமாறு ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் உத்திரவாதம் பெற்றுக் கொண்டு மாடுகள் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தி மாடுகளை அழைத்து செல்லாவிட்டால் மாடுகளை இன்று ஏலம் விடப்படும் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
பா.முகமது லாபிர் 
இ.மேநி.நீதே.தொ, கோட்டைப்பட்டினம் ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments