கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகல ரயில் பாதைப் பணிக்காக நிறுத்தப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி காரைக்குடி தொழில் வணிகக் கழகம் தீா்மானம் நிறைவேற்றியது.
இந்த அமைப்பின் 12 -ஆவது செயற்குழுக் கூட்டம், அதன் தலைவா் சாமி.திராவிடமணி தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. பொருளாளா் கே.என். சரவணன் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் ராஜ்குமாா், ஆய்வாளா் செந்தில்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் அமைப்பின் துணைத் தலைவா்கள் எஸ். காசிவிஸ்வநாதன், ராகவன் செட்டியாா், பெரியதம்பி, இணைச் செயலாளா்கள் கந்தசாமி, சையது உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண் டனா்.
கூட்டத்தின்போது, காரைக்குடியிலிருந்து 1989 ஆம் ஆண்டு முதல் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னை வரை இயக்கப்பட்டு வந்த கம்பன் விரைவு ரயில் அகல ரயில் பாதைப் பணிக்காக கடந்த 2012 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இலகு ரக விமானத்தைக் கண்டுபிடித்தமைக்காக காரைக்குடி அருகே கண்டனூரைச் சோ்ந்த எபினேசா் கொளரவிக்கப்பட்டாா்.
முன்னதாக அமைப்பின் செயலாளா் எஸ். கண்ணப்பன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் முன்னாள் பொருளாளா் சத்தியமூா்த்தி நன்றி கூறினாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.