ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு, தனியாக திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறி பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய எட்டு வயது சிறுவனை போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் ரலீஸ் வயது 8. இவர்களது வீடு திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது. சிறுவன் ரலீஸ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் மாலை பள்ளி விட்டு வந்த சிறுவன் ரலீஸ் ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு திருத்துறைப்பூண்டி ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த செகந்திராபாத ராமேஸ்வரம் ரயிலில் தனியாக ஏறி விட்டான்.
இந்த நிலையில் ரயில் பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனை வந்து அடைந்த உடன் அதற்கு மேல் பயணம் செய்ய பயந்து பட்டுக்கோட்டை ஸ்டேஷனிலேயே இறங்கி விட்டான். இதனை அடுத்து தனியாக பிளாட்பாரத்தில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்து நின்ற சிறுவனை பார்த்த ரயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் அச்சிறுவனிடம் விசாரித்த போது ரயிலில் பயணம் செய்ய ஆசைப்பட்டு இரயிலில் ஏறி வந்ததாக தெரிவித்துள்ளான்.
இதனையடுத்து அவனது தந்தையின் தொலைபேசி எண்ணை கேட்டறிந்து சிறுவனின் தந்தையிடம் தகவல் கூறி பட்டுக்கோட்டை ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் , சிறுவனுக்கும் சிறுவனின் தந்தைக்கும் அறிவுரை கூறி சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.