மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி!



மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவிலான பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட  கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணாஜிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, அம்மாபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப்பள்ளி, கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோட்டைப்பட்டினம் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய ஆறு மையங்களில் குறுவள மைய அளவில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இப்ப பயிற்சியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணும எழுத்தும் தொடர்பான பயிற்சியும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியும் நடைபெற்றது.

இப்பயிற்சியினை வட்டாரக் கல்வி அலுவலர் இந்திராணி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments