வேதாரண்யம் அருகே கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் சுற்றிபார்க்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது வனச்சரகர் தகவல்






வேதாரண்யம் அருகே கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தை சுற்றுலா பயணிகள் சுற்றிபார்க்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என வனச்சரகர் தெரிவித்தார்.




வனவிலங்கு சரணாலயம்

வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பசுமைமாறா வனவிலங்கு சரணாலயம் 24 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமான் மற்றும் புள்ளிமான், 500-க்கும் மேற்பட்ட குரங்குகள், நூற்றுக்கும் மேற்பட்ட மட்ட குதிரைகள் மற்றும் நரி, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மான்களுக்கு தண்ணீர் வசதிக்காக 17 செயற்கை தொட்டிகளும், 40 இயற்கையான குளங்களும் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மான் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு வரும். அப்போது செயற்கையாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடைக்காலத்தில் பலமுறை மழை பெய்ததால் வனவிலங்கு சரணாலயத்தின் தண்ணீர் தட்டுப்பாடு வரவில்லை.  

சுதந்திரமாக சுற்றிதிரியும் மான்கள் 

கடந்த காலங்களில் சரணாலயத்தில் தண்ணீர் தட்டுபாட்டால் அடிக்கடி மான்கள் காட்டைவிட்டு வெளியேறிவிடும். ஆனால் இந்த ஆண்டு கோடைமழையால் மான்களுக்கு போதிய புல்லும், தண்ணீரும் தட்டுப்பாடு இன்றி கிடைத்ததால் காட்டை விட்டு மான்கள் வெளியேறவில்லை. மேலும் உணவும், தண்ணீரும் போதுமான அளவு கிடைத்ததின் காரணமாக மான்கள் நன்றாக செழித்து வளர்ந்து காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. மேலும் மழை அதிகம் பெய்ததால் காட்டிற்கு செல்லும் பாதைகளில் நீர் தேங்கியதால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பலநாட்கள் மூடப்பட்டன. இதனால் வனவிலங்குகள் எந்தவித இடையூறும் இன்றி சுதந்திரமாக சுற்றி திரிந்தும், இனப்பெருக்கத்திலும் ஈடுபட்டன. தற்போது மான்கள், நரிகள், குதிரை, குரங்குகள், முயல்கள், பன்றி கூட்டம் கூட்டமாக சரணாலயத்தில் காணப்படுகிறது. அனைத்து வசதிகளும் இதனால் சரணாலயத்தில் உள்ள வனவிலங்குகளை பார்ப்பதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

இதனால் சரணாலயத்தில் உள்ள வனவிலங்கு பார்ப்பதற்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வார விடுமுறை நாட்களில் மேம்பாட்டு குழுவின் சார்பில் உணவகம் அமைத்து உணவுகள் வழங்கப்படுகிறது சுற்றுலா பயணிகள் வனவிலங்கு சுற்றி பார்ப்பதற்கு சைக்கிள், மினி வேன், வழிகாட்டி பைனாகுலர் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வனவிலங்குகளை காண்பதற்கு காலை 6 முதல் 10 மணி வரை மாலை மூன்று மணியிலிருந்து 6 மணி வரைமிக உகந்த நேரம் என கோடிக்கரை வனச்சரகர் அயூப்கான் தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments