அரியானா மாநிலம் மகேந்திரகர்வ் மாவட்டத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 70), துர்கா தேவி (65) மற்றும் அவரது மகன் ஆகியோர் ராமேசுவரம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி துர்கா தேவி திடீரென இறந்தார். அவரது உடல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது அதன் பிறகு அவரது உடலை அரியானா மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்காக அந்த குடும்பத்தினர் பல்வேறு முயற்சி மேற்கொண்டனர்.
அரியானா செல்வதற்கு எந்த ஆம்புலன்சுகளும் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியை சேர்ந்தவர்கள் த.மு.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.சலிமுல்லாஹ்கானை தொடர்பு கொண்டால் தேவையான வசதிகளை செய்து தருவார் என கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த குடும்பத்தினர் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர கேட்டு கொண்டனர். மாவட்ட தலைவர் இப்ராஹிம், மருத்துவ சேவை அணி செயலாளர் தாஜுதீன், மற்றும் நிர்வாகிகள் அந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இதை தொடர்ந்து த.மு.மு.க. ஆம்புலன்ஸ் டிரைவர் சங்கர் என்பவர் துர்காதேவி உடலை சுமார் 2850 கி.மீ. தூரத்தை பயணம் மேற்கொண்டு அவரது சொந்த ஊரில் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த தகவலை அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் சலீமுல்லாஹ்கான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மருத்துவ சேவை அணியினர் உள்ளிட்ட அனைவரையும் ம.ம.க. மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பாராட்டினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.