கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாளான டிசம்பர் 22 தேசிய கணித நாளாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (22-12-2022) கணித மன்றம் மற்றும் வானவில் மன்றத்தின் சார்பில் தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிழ்வில் கணித மேதை ராமானுஜன் அவர்களின் திருஉருவப் படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் மலர்கள் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு கணித மேதையின் வாழ்க்கை வரலாற்றை கணித மன்ற செயலாளர் கந்தவேள் எடுத்துரைத்தார். ஆறு முதல் எட்டு வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணித வாய்பாடு போட்டி நடத்தப்பட்டது. இதில் 16 வாய்பாடு வரை தெளிவுடன் ஒப்புவித்த மாணவர்களுக்கு அழகிய எழுது பொருள் பெட்டி (Pencil box) பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி உதவித் தலைமையாசிரியர் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இறுதியில் வானவில் மன்ற செயலாளர் குருப்ஸ்கயா நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.