முத்துப்பேட்டை அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது கார், திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது காாில் இருந்த 6 பேரும் உடனடியாக கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாகூா் தர்காவுக்கு வந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பரிமார் தெருவை சேர்ந்தவர் கிதிர்முகம்மது. இவருடைய மகன் சேக் நூர்தீன். இவர் தனது மனைவி உள்பட மூன்று பெண்கள் மற்றும் 2 குழந்தைகளுடன் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள தர்காவுக்கு கந்தூரி விழாவில் பங்கேற்க காரில் வந்தார்.
பின்னர் அவர்கள் நாகூரில் இருந்து காரில் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சேக்நூர்தீன் குடும்பத்தினர் பயணித்த கார் வந்தபோது பின்னத்தூர் காத்தவராயன் கோவில் அருகே திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷேக்நூர்தீன் காரை நிறுத்தினார். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் கார் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. உடனே காரில் இருந்த அனைவரையும் கதவை திறந்து சேக் நூர்தீன் வெளியேற்றினார்.
இதனால் காரில் இருந்த 6 பேரும் கீேழ இறங்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்த பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
எலும்புக்கூடானது
தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது.
இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் எடையூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.