மணமேல்குடி ஒன்றியத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சியினை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஜீவானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் மற்றும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் திரு செழியன் மற்றும் திருமதி இந்திரா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பயிற்சி பாடவாரியாக தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு அடிப்படை திறன்களை வளர்ப்பதற்காக ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு மாணவர்கள் எளிதில் கற்பதற்கும்..
ஊக்கப்படுத்துவதற்கும் பயிற்சியில் பாடவாரியாக வழங்கப்பட்டது.
இப்ப பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கருத்தாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.