போலியோ இல்லாத பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்றால் அதற்கு போலியோ சொட்டு மருந்துகள் முறையாக வழங்கப்படுவதே காரணமாகும். நமது நாட்டில், அரசாங்கமே முன் வந்து ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அமைத்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்தை அளிக்கிறது.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9ஆவது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 4ம் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும், இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் 9 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகளை வழங்குகிறது. பிறந்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து 2 கட்டமாக வழங்கப்படுகிறது. குழந்தை பிறந்து 6 வாரங்களுக்குப் பிறகு முதலாவது சொட்டு மருந்தும், 14 வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் வழங்கப்படுகிறது.
இதுதவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் போலியோவை ஒழித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.