கட்டுமாவடி கடல் பகுதிகளில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத ஆமை




புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும், பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் கட்டுமாவடியை சேர்ந்த மீனவர்களான விஜய், செம்பியன் மகாதேவி பட்டினத்தை சேர்ந்த ரகு ஆகியோர் குறைவான ஆழத்தில் மீன் பிடிக்கப்படும் பட்டி வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் 15 கிலோ எடையுள்ள ராட்சத ஆமை சிக்கியது. இது அரிய வகையை சேர்ந்த கடல் ஆமை என்பதால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments