அறந்தாங்கியில் குதிரை வண்டி பந்தயம்




அறந்தாங்கியில் குதிரை வண்டி பந்தயம் நேற்று நடைபெற்றது. பந்தயத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 34 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.

பந்தயம் இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் பச்சை காளியம்மன் கோவிலில் இருந்து ஆவணத்தாங்கோட்டை வரையில் 10 கிலோ மீட்டர் தொலைவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இரண்டாவது பிரிவுக்கு 7 கிலோ மீட்டர் தொலைவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பந்தயத்தில் குதிரை வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்து சென்றது. இதில் வெற்றி பெற்ற குதிரை வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து குதிரை வண்டிகளுக்கும் பரிசு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. பந்தயத்தைக்காண பட்டுக்கோட்டை சாலையில் ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments