புதுக்கோட்டை செல்லப்பா நகரை சேர்ந்தவர் சடகோபன் (வயது 52). இவர் கூத்தாச்சிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி (49). இவர் அகரப்பட்டி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கோவைக்கு சென்று விட்டு நேற்று காலை பள்ளிகளுக்கு பணிக்கு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உள்ளே சென்று பார்த்த போது பீரோக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தன. பீரோவில் இருந்த நகைகள் திருட்டு போயிருந்தன. இது குறித்து டவுன் போலீசாருக்கு சடகோபன் தகவல் தெரிவித்தார்.
40 பவுன் நகைகள் திருட்டு
இதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். வீட்டில் பீரோக்களில் கவரிங் நகைகளோடு, தங்க நகைகளையும் சேர்த்து வைத்திருக்கின்றனர். இதில் கவரிங் நகைகளை கட்டிலில் விட்டு விட்டு தங்க நகைகளை மட்டும் மர்மநபர்கள் திருடிச் சென்றிருக்கின்றனர்.
மொத்தம் 40 பவுன் நகைகள் திருடு போனதாக சடகோபன் போலீசாரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.