புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த ராமன் (வயது 19). இவர், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பஞ்சாப்பில் நடைபெற்ற தடகள போட்டியில் கலந்து கொண்டு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்துடன் சொந்த ஊர் திரும்பிய ஆனந்த ராமனுக்கு புதுக்குடி கிராம மக்கள் வழிநெடுக பட்டாசு வெடித்து மலர் தூவி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். இதுகுறித்து அந்த பகுதி கிராம மக்கள் கூறுகையில், எங்கள் சின்ன மீனவ கிராமத்தில் இருந்து பஞ்சாப் வரை சென்று தங்கப்பதக்கம் வென்ற ஆனந்த ராமனுக்கு தமிழக அரசு முறையான பயிற்சி கொடுத்து அவரை சர்வதேச போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது அவர் நிச்சயம் சர்வதேச போட்டியில் சாதிப்பார் என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.